Guru Sani: சனியும் குருவும் அற்புதங்கள் செய்யப் போகும் ராசிகள்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்குபவர் சனி பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. நன்மைகள் தீமைகள் என பாரபட்சமில்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

குரு பகவான் மங்களநாயகனாக கருதப்படுகிறார். நவகிரகங்களில் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு இவர் காரணியாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். குருபகவான் வரும் டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார். குரு பகவான் இந்த இரண்டு ராசிகளின் பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

மேஷ ராசி

உங்களுக்கு வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு மிகவும் நன்றாக அமையப் போகின்றது. குருபகவானால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீரென வருமானத்தின் ஆதாரம் அதிகரிக்கும். பணம் சேமிப்பும் அதிகரிக்கும். பல காரியங்கள் வெற்றி அடையும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கை முழுமையாகும்.

மிதுன ராசி

குருபகவான் உங்களுக்கு பதினோராவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

வரக்கூடிய புத்தாண்டு உங்களுக்கு சொல்லிப்பாக அமையும். குரு மற்றும் சனி உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீரென பண வரவு இருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்பு மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுத் தரும். மகிழ்ச்சியான நேரத்தை குடும்பத்தோடு செலவிடுவீர்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *