அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளார்! அலெக்ஸி நவாலினி மனைவி குற்றச்சாட்டு: 14 நாட்கள் உடலை வழங்க மறுப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பரபல விமர்சகரான அலெக்ஸி நவாலினி ரஷ்ய சிறையில் பிப்ரவரி 18 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

நவாலினியின் அரசியல் பின்னணி
நவாலினி(Alexei Navalny) ஊழல் எதிர்ப்பு ஆர்வலராகவும், புடினின்(Russian president Vladimir Putin) ஆட்சியின் மிகப்பெரிய விமர்சகராகவும் அறியப்பட்டார்.

நவாலினி கடந்த 2020 ஆகஸ்டில், சைபீரியாவில் விமானப் பயணத்தின் போது நோவிச்சோக் எனப்படும் நரம்பு முகவரால் விஷம் வைக்கப்பட்டார்.

இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது, அத்துடன் அவரால் உடனடியாக மருத்துவ உதவி பெற முடியவில்லை, இது அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கியது.

பின்னர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், நீண்டகால விளைவுகள் அவரை பாதித்தன.

சிறையில் மரணம்
2021 ஜனவரியில் ரஷ்யாவுக்கு திரும்பியதும், நவாலினி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது, ஆனால் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2024, பிப்ரவரியில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

விசாரணை மற்றும் சர்ச்சைகள்
நவாலினியின் மரணத்திற்கான காரணம் குறித்து சுயாதீன விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

ரஷ்ய அரசு இயற்கையான காரணங்களால் மரணம் அடைந்ததாகக் கூறுகிறது, ஆனால் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் விஷம் வைக்கப்பட்டதாகவே உறுதியாகக் கூறுகின்றனர்.

மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

நவாலினியின் மரணம் பற்றிய விசாரணை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகம் முழுவதும் எழுந்துள்ளன.

அவரது ஆதரவாளர்கள் நவாலினியின் அரசியல் நடவடிக்கைகளுக்காகவே அவர் விஷம் வைக்கப்பட்டதாக நம்புகின்றனர்.

இந்த மரணம் ரஷ்யாவில் அரசியல் எதிர்ப்பாளர்களின் நிலை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

நவாலினி மனைவி குற்றச்சாட்டு
யூலியா நவாலினி(Yulia Navalnaya), தனது கணவர் சிறையில் இருந்தபோது ரஷ்ய அரசால் விஷம் வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நவாலினியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது மரணத்திற்கு ரஷ்ய அரசே பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

நவாலினியின் உண்மையான உடல்நிலை குறித்து ரஷ்ய அரசு தகவல்களை மறைத்ததாகவும், அவரது உடலை இன்னும் ஒப்படைக்காமல், மேலும் 14 நாட்கள் உடலை அவரது தாயாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இதன் மூலம் மரணம் பற்றிய விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் யூலியா குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் நவாலினியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், நவாலினியின் மரணத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நவாலினியின் மரணம் அரசியல் பழிவாங்கல் என்றும், ரஷ்ய அரசு தனது விமர்சகர்களை அடக்க முயற்சிப்பதாகவும் யூலியா குற்றம் சாட்டியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *