காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால்…

பொதுவாக நாம் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென்று ஏதாவது ஒரு பூச்சி காதுக்குள் சென்று விட்டால் என்ன செய்வது. உதாரணத்திற்கு ஒரு எறும்பு காதிற்குள் சென்று விட்டது. அதை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று தெரியாமல் பலரும் காதை போட்டு ஆடுவது, காதுக்குள் குச்சியை வைத்து குத்துவது போன்ற செயல்களை செய்து வருகின்றோம்.ஆனால் இப்படி செய்வது தவறான ஓன்று. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.ஆனால் தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. அதனால் தண்ணீரை ஊற்ற வேண்டாம்.அதற்கு பதிலாக உடனடியாக காதினுள் எண்ணையையோ அல்லது தண்ணீரில் உப்பு போட்டு கரைத்து காது நிரம்ப ஊற்ற வேண்டும். இதனால் காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *