கணவன் கண்ணெதிரே புதுமணப்பெண் மரணம்… சம்பவ இடத்திலேயே பலியான சோகம்….!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (24). இவருக்கும் சந்தியாவுக்கும்( 20) திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், சென்னை, மாதவரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு, இவர்கள் இருவரும், ஹரிதாஸ் தந்தையுமாக 3 பேரும் சேர்ந்து ஒரு ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில், மாதவரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு சென்றிருந்தனர். தைப்பூச விழாவை முடித்து விட்டு, நேற்று மூவரும் அதே இருசக்கர வாகனத்தில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இவர்களின் இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் மூவரும் சாலையில் விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து, சாலையில் விழுந்த சந்தியா மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே சந்தியா பரிதாபமாக பலியானார்.
ஹரிதாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யனாரப்பனுக்கு காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால், ஜி.எஸ்.டி., சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைப் பார்த்ததும் உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடலில் இறங்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். அவர்களில் நிவேதா மட்டுமே உயிருடன், மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். நவீன்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இருவரது உடல்களும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதா நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஒருநாள் திரும்புவதற்குள் புதுமாப்பிள்ளை மற்றும் 6 ம் வகுப்பு படித்து வந்த சரவணனும் இறந்தது கும்பகோணம் பகுதியில் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *