IND vs SA 2nd Test Day 1 Live Score: எல்கர், டோனி அவுட்; தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

India Vs South Africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் ‘பாக்சிங் டே’ போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. இதனால் தொடரில் 1-0 என்கிற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணி பவுலிங் செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டீன் எல்கர் – எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர் சிராஜ் பந்துவீச்சில் சிக்கி 4 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ஜோடி அமைத்த டோனி டி ஸோர்ஸி – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடியில், டோனி 2 ரன்னுக்கும், டிரிஸ்டன் 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த கைல் வெர்ரேய்ன் – டேவிட் பெடிங்காம் ஜோடியை தனது மிரட்டல் பந்துவீச்சால் சிராஜ் உடைத்தார். இந்த ஜோடியில் டேவிட் 12 ரன்னில் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இதன்பிறகு வந்த மார்கோ ஜான்சனின் விக்கெட்டையும் சிராஜ் கைப்பற்றினார். ஏற்கனவே 3 விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், மார்கோ ஜான்சனின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். களத்தில் இருந்த கைல் வெர்ரேய்ன் சிராஜ் பந்தில் 15 ரன்னுக்கு அவுட் ஆனார். 13 ஓவருக்குள் டாப் ஆடரை பறிகொடுத்து 29 ரன் மட்டும் எடுத்து ரன் சேர்க்க தடுமாறி வந்த தென் ஆப்ரிக்கா மிடில் -ஆடரும் சுத்தமாக காலி செய்யப்பட்டதால் ரன் சேர்க்க முடியாமல் தத்தளித்தது.

லோ-ஆடரில் வந்த வீரர்களின் விக்கெட்டை முகேஷ் குமாரும், பும்ராவும் மாறி மாறி வீழ்த்த தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த அந்த அணி 23.2 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *