சிவில் உடையில் கூட இந்தியப் படைகள் மாலத்தீவில் இருக்காது., இந்திய-விரோத நிலைப்பாட்டில் முய்ஸு தீவிரம்

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தனது இந்திய-விரோத நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுடனான சர்ச்சையை தூண்டி சீனாவுடன் நெருங்கி வரும் மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு மீண்டும் கடுமையாக பேசியுள்ளார்.

மே 10-ஆம் திகதிக்குப் பிறகு, மாலத்தீவில் சிவில் உடையில் உள்ளவர்கள் உட்பட எந்த இந்திய ராணுவ வீரர்களும் தனது நாட்டில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முகமது முய்ஸு கூறியுள்ளார்.

சீனாவுடன் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில மணித்தியாலங்களில் மாலைதீவு ஜனாதிபதி தனது குரலை கூர்மைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பின்னணி என்ன?
முய்ஸு ஆட்சிக்கு வந்த பிறகு, மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூரம் அதிகரித்தது.

இந்திய இராணுவத்தினர் வெளியேறவேண்டும் என்ற உத்தரவில், மாலத்தீவில் உள்ள மூன்று விமானப்படை தளங்களில் செயல்பட்டு வரும் இந்தியப் படைகளை வாபஸ் பெறுமாறு முய்ஸு முன்பு உத்தரவிட்டிருந்தார்.

ஒரு விமானத் தளத்தில் உள்ள படைகள் மார்ச் 10-ஆம் திகதிக்குள் வெளியேறவும், மற்ற இரண்டு தளங்களில் உள்ளவர்கள் மே 10- ஆம் திகதிக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

டெல்லியில் பிப்ரவரி 2ஆம் திகதி இதுகுறித்த உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. மாலத்தீவும் இந்தியாவின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டது.

இந்தியா திரும்பப் பெறும் படைகளுக்கு பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் குழு கடந்த வாரம் அந்த தீவுகளை சென்றடைந்தது.

ஆனால், மாலத்தீவில் உள்ள சில எதிர்க்கட்சிகள் புதிய வாதத்தை முன்வைத்துள்ளன.

அங்கு வந்துள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் உண்மையில் இராணுவ அதிகாரிகள் என்றும் அவர்கள் சிவில் உடையில் அனுப்பப்பட்டனர் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த முய்ஸு, ‘இந்திய படைகளை வெளியேற்றுவதில் எங்கள் அரசு வெற்றி பெற்றுள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் புதிய திருப்பங்களை வைக்க முயல்கின்றன. அப்படியொரு சந்தேகம் வேண்டாம். மே 10-ஆம் திகதிக்குப் பிறகு இந்தியப் படைகள் நாட்டில் இருக்காது. அவர்களை சிவில் உடையில் கூட இருக்க விடமாட்டோம்’ என்றார்.

மாலத்தீவில் உள்ள மூன்று விமானப்படை தளங்களில் 88 இந்திய ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உள்ளூர் மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ வெளியேற்றம் போன்ற சேவைகளை வழங்குகிறார்கள்.

ஆனால், இந்தியாவை ஒதுக்கி வைத்திருக்கும் முய்ஸு, இந்த சேவைகளுக்கான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் இலங்கையுடன் கையெழுத்திட்டார்.

எதிர்காலத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த இந்தியப் பணியாளர்களும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

சீனாவுக்கு ஆதரவான தலைவராக அறியப்படும் முய்ஸு எதிர்பார்த்தபடியே சொன்னவுடன் மிகவும் நெருக்கமாகி வருகிறார். சமீபத்தில், இந்த இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலத்தீவுக்கு ராணுவ தளவாடங்களை இலவசமாக வழங்க சீனா முன்வந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *