சிட்டாக பறந்த இன்னோவா.. “ரகசிய அறையில் ரூ.1.90 கோடி”… தட்டி தூக்கிய போலீசார்.!!

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.1.90 கோடி ஹாவாலா பணத்தை கேரள காவல் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குருடிக்காடு என்ற இடத்தில் கேரள போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற இன்னோவா காரை நிறுத்தினர்.

ஆனால் கார் நிற்காமல் வேகமாக செல்லவே ஜீப்பில் விரட்டி சென்று காவல் துறையினர் மடக்கி பிடித்து வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது காரில் இருக்கைக்கு அடியில் ரகசிய அறை அமைத்து இருப்பது தெரியவந்தது. அந்த அறையில் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.90 கோடி பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் காரில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் மலப்புரம் அங்காடிப்புரத்தை சேர்ந்த முகமது குட்டி மற்றும் புத்தனங்காடியை சேர்ந்த முகமதுநிசார் என்பது தெரியவந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *