அஸ்வினுக்கே இந்த நிலைமையா?… சென்னை மேட்ச்சுக்கு டிக்கெட் கேட்ட பதிவு வைரல்!

என்னாது, அஸ்வினுக்கே மேட்ச் பாக்க டிக்கெட் இல்லையா என்று கேட்கும் அளவுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடர் இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பல வெற்றிகளை தேடித்தந்தார்.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் 21 லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

வரும் 22 ஆம் தேதி நடக்க இருக்கும் நடப்பாண்டின் முதல் ஐபிஎல் டி20 லீக் போட்டியில் நடப்புச்சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் களம் காண உள்ளனர்.

இந்த போட்டிக்கு டிக்கெட் விற்பனை நேற்று ஆன்லைனில் நடந்தது. பேடிஎம் மற்றும் இணையதளங்களில் விறுவிறுப்பாக டிக்கெட்டுகள் விற்பனை நடந்தது. சென்னை மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் டிக்கெட் வாங்க இருந்தது.

இதனை சுட்டிக்காட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது மகள்களுக்கு முதல் போட்டியை காண டிக்கெட் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐ.பி.எல். தொடக்கப் போட்டிக்கான டிக்கெட்டுக்கு நம்ப முடியாத அளவுக்கு டிமாண்ட் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகள்கள், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் அறிமுகப்போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளை காண விரும்புவதாக கூறியுள்ள அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆண்டுக்கு ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் லாபம் கொழிக்கும் போட்டிகளாக உள்ளன. விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாத ஐபிஎல் போட்டிகள் இந்த கோடையில் ரசிகர்களை குஷி படுத்த தயாராகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *