தனுஷ் இயக்கும் ராயன் படத்தின் கதை இதுதானா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கலையொட்டி தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படம் உருவானபோது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இருப்பினும் திரைக்கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இதே போன்று தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சுதீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன. அதாவது தனுஷ், சுதீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம் ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்கள் எப்படி கேங்ஸ்டர்களாக மாறுகின்றனர் என்பது தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

படத்தில் மூவரும் ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டலை நடத்தி வருகின்றனர். ராயன் படத்தின் வெற்றியை பொறுத்து அடுத்த பாகங்கள் உருவாக கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனுஷ் முன்னதாக ப.பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். ராஜ்கிரன், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் ஃபீல் குட் மூவியாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் தனுஷ் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது அவர் ராயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதேபோன்று நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் ஒன்றையும் தனுஷ் விரைவில் இயக்க உள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *