#JUST IN : முன்னாள் முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு..!

முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த பிஜேபி தலைவருமான எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு.17 வயது பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கில் உதவி கோரி பெண் ஒருவர், தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். அப்போது, எடியூரப்பா தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குடும்பம் உதவி கோரி பாஜக தலைவரின் வீட்டிற்குச் சென்றது. பாஜக தலைவர் சிறுமியை ஒரு அறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *