Kangana Ranaut: வேறு ஒருவரை காதலிக்கிறேன்.. மனம் திறந்த கங்கனா ரனாவத்

பொதுவாக சமூக வலை தளங்களில் எப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கங்கனா ரனாவத் தான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று மனம் திறந்துள்ளார்.

 

நடிகை கங்கனா ரனாவத் எப்போதும் சமூகவலைதங்களில் ஒளிவு மறைவின்றி கருத்துகளை தெரிவித்து வருவார். இவரது கருத்துக்கள் பல சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். இந்த நிலையில் சமீபத்தில் கங்கனா ஒருவருடன் கை கோர்த்த படி இருந்த புகைப்படம் வெளியானது. அந்த நபரைத்தான் கங்கனா காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் எனது “ஹேர் ஸ்டைலிஸ்ட் ” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்று இருந்த கங்கனா ரனாவத் அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து அந்த தொழிலதிபரை கங்கனா ரனாவத் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் அதிருப்தி அடைந்த கங்கனா அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்” தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான் தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். அந்த தொழில் அதிபர் திருமணமாகி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறால் நான் வேறு ஒருவரை காதலிக்கிறோன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்பேன். அதுவரை பொறுத்திருங்கள் . இரண்டு பேர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்கள் உறவை பற்றி தகாத முறையில் பேசுவது சரியல்ல என்று கூறி உள்ளார்.

பாலிவுட்டில் கலக்கி வந்த நடிகை கங்கனார் தமிழில் ஜெயம்ரவியுடன் இணைந்து தாம் தூம் படத்தில் தமிழில் அறிமுகமானார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகிய தலைவி படத்தில் நடித்திருந்தார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வெளியானது. மேலும் இந்தியில் ‘தேஜஸ்’ திரைப்படம் வெளியாகின. ஆனால் இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் ‘மணிகர்ணிகா பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் இவர் தயாரித்த டிக்கு வெட்ஸ் சிரு திரைப்படமும் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *