Manjummel Boys : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியானது தகவல்..

மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தற்போது அமோக வரவேற்பை பெற்று திரையரங்களில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம், கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலுக்குதான் ரசிகர்கள் பலர் காத்துக்காெண்டுள்ளனர்.

மஞ்சுமெல் பாய்ஸ்:

மலையாள படங்களுக்கு பொதுவாகவே தமிழ் நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் மலையாளம் பாதியும்-தமிழ் மீதியும் வைத்து எடுக்கப்படும் மலையாள படங்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் ஆதரவு குறித்து சொல்லவே வேண்டாம். அப்படி, தமிழ் மக்களை நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவல் இயக்கியிருந்தார்.

2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ். கேரளா, கொச்சியில் உள்ள மஞ்சுமெல் என்ற இடத்தில் இருந்து சில நண்பர்கள் கொடைக்காணலிற்கு டூர் வருகின்றனர். வந்த இடத்தில் அனைவரும் குணா குகையின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று அங்கு சுற்றி பார்க்கின்றனர். அப்போது, ஒரு நண்பர் தவறுதலாக பல அடி ஆழ குழிக்குள் விழுந்து விடுகிறார். அவரை எப்படி உயிருடன் காப்பாற்றினர் என்பதை வைத்துதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓடிடி ரிலீஸ் எப்போது?

வழக்கமாக, திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றில் டிஜிட்டல் உரிமங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும். படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே அவை ஏதேனும் ஒரு பிரபல ஓடிடி தளங்களிலும் வெளியாகிவிடும். அந்த வகையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பல ஓடிடி தளங்கள் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம், இன்றளவும் தமிழகம் மற்றும் கேரளாவில் நன்றாக ஓடி வருவதால், இந்த மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகாது என தெரிய வந்திருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இப்படம் ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதமும் மக்களின் வரவேற்பு தொடர்ந்தால், அதன் பிறகு ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போடப்படும் என்றும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் உரிமத்தை ஏன் இன்னும் வழங்கவில்லை:

டாப் ஸ்டார்கள் நடிக்கும் படங்களே, வெளியான சில நாட்களுக்குள்ளாக ஓடிடி ரிலீஸ் தேதியை பெற்று விடுகின்றன. ஆனால், அவை பெரும்பாலான சமயங்களில் மக்களின் வர வேற்பை பெறாத படங்களாக இருக்கின்றன. ஆனால் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பொறுத்தவரை, இது பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. தற்போது வரை இப்படம் 150 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக அதிக வசூல் செய்த மலையாள படமும் இதுதான். எனவே, இதன் ஓடிடி உரிமத்தை பெரிய தாெகைக்கு விற்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இதனால்தான், டிஜிட்டல் உரிமம் குறித்த அறிவிப்பு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மலையாள படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளம்தான் வைத்துள்ளது. அந்த வகையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி உரிமையையும் இந்த தளமே வாங்கிவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது (Manjummel Boys OTT Release News In Tamil)

இது வரை செய்துள்ள வசூல்…

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியாகி 19 ஆட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் இந்தியாவில் மட்டும் 89 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உலகளவில் இப்படம், சுமார் 150 கோடியை விரைவில் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *