மாரிமுத்துவின் மரணம் இயற்கை அல்ல…. காரணம் இதுதான்! அகோரியின் ஷாக் தகவல்

நடிகர் மாரிமுத்து மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில், அவரது இறப்பு இயற்கையல்ல என்று அகோரி ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். ஆனால் இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு திடீர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இதனால் திரையுலகினர் பெரும் சோகத்தில் காணப்பட்டனர்.

இவருக்கு பதிலாக எதிர்நீச்சல் சீரியலில் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார். சீரியலில் மாரிமுத்து எதிர்மறையாக கதாபாத்திரத்தில் நடித்தாலும், மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தினை பிடித்திருந்தார்.

அகோரி கலையரசன் கொடுத்த ஷாக்
இந்நிலையில் டிக் டாக் மூலம் அதிகமாக காணொளிகளை வெளியிட்டு வந்த கலையரசன் தற்போது அகோரியாக மாறியுள்ளார். இவர் அளித்துள்ள பேட்டியில் மாரிமுத்துவின் இறப்பு இயற்கையானதல்ல என்று கூறியுள்ளார்.

இவர் கூறுகையில், என்னதான் எதிர்நீச்சல் சீரியல் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தாலும் மாரிமுத்துவின் இறப்பு இயற்கையானது அல்ல என்று கூறியுள்ளார்.

சிலர் உடல் நலக்குறைவினால் இறந்தார் என்றும் சிலர் விதிப்படி நடந்திருக்கலாம் என்று கூறினாலும் உண்மை என்னவெனில், சீரியலில் பெண்களுக்கு எதிராக நடித்து, அவர்களை கொடுமைப் படுத்துவது போன்று இருந்துள்ளார்.

ஆதலால் தினமும் சீரியல் பார்க்கும் பெண்கள் அனைவரும் அவரை ஒரு சாவு வராதடா உனக்கு… பொம்பளைகளை இப்படியா டார்ச்சர் பண்ணுவ என்று அபசகுணமான வார்த்தைகளால் தான் மாரிமுத்து இறந்து போனார் என்று கூறியுள்ளார்.

இது போன்று விஜயகாந்த், பங்காரு அடிகளார் இவர்களின் இறப்பும் தனக்கு முன்கூட்டியே தெரியும், அதுமட்டுமின்றி என் கண் முன்பு யார் வந்தாலும் அவர்களுடைய மரணத்தை கணித்துவிடுவதாக அகோரி கலையரசன் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *