இன்னும் 2 நாட்களில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

செவ்வாய் பகவான் வீரம், தைரியம், வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்பவர் ஆவார். செவ்வாய் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 45 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இந்நிலையில் கிரங்களின் சேனாதிபதி செவ்வாய் பெயர்ச்சி இன்னும் 2 நாட்களில் அதாவது மார்ச் 15,ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06:22 மணிக்கு, சனியின் திரிகோண ராசியான கும்பத்தை கடக்கப் போகிறார். எனவே இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி உயர்வு கிடைக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதானமாக செயல்படவும். பொறுமையுடன் இருக்க முயற்சிக்கவும். கல்விப் பணிகளில் கவனம் தேவை.

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் இனிமையான பலன் கிடைக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க முயற்சிக்கவும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். குழந்தையின் ஆரோக்கியம் மோசமடையலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்ற தாழ்வுகள் வரலாம். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். அரசாங்கத்தின் ஆதரவையும் பெறலாம்.

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நிறைய நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாடாய் படுத்தலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் மனம் கலங்கலாம். குடும்பத்துடன் மதப் பயணம் மேற்கொள்ளலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கடின உழைப்பு அதிகமாக இருக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் அமைதியாக இருக்கும். நம்பிக்கையின்மை ஏற்படலாம். வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கலாம். நண்பரின் உதவியால் வருமானத்தில் வளர்ச்சியை காண்பீர்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நம்பிக்கை அதிகரிக்கும். அறிவுசார் வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் கலங்காமல் மகிழ்ச்சியுடன் இருக்கும். கோபத்தைத் தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். லாப வாய்ப்புகள் பெறலாம். பணியில் மாற்றம் ஏற்படலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், நம்பிக்கையின்மை ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படலாம். தந்தையின் ஆதரவு பெறுவீர்கள். வியாபாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் தேவையற்ற கோபம், சண்டை ஏற்படலாம். உடல்நலத்தில் விழிப்புடன் இருக்கவும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கல்விப் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம்.

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் உற்சாகத்தை தவிர்க்கவும். பழைய நண்பருடன் தொடர்பு கொள்ளலாம். மகிழ்ச்சியான பலனை பெறுவீர்கள்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *