நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம்.., சீமான் கேட்ட கரும்பு விவசாயி சின்னத்திற்கு மறுப்பு

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சின்னம் பிரச்சனை
வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.

ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையோ அல்லது அரசியலமைப்புக்கு முரணானதோ இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

பின்பு, உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டது.

மைக் சின்னம்
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னதாக, “நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னத்தை கொடுத்தாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று சீமான் கூறியிருந்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *