உணவில் ”முருங்கைக் கீரை”யை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்..!

முருங்கைக்கீரை சுமார் 300க்கும் மேற்பட்ட நோய்களை வராமல் தடுக்கிறது. 67 வகையான நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இதில் 90 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளதால் இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும்.

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கண் பிரச்சனை, உடல் சூடு போன்றவை குணமடையும். வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை அளவை சமப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள், தாய்மார்கள் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தேவையான சக்துக்கள் கிடைக்கும்.

ஆஸ்துமா, மார்பு சளி, இரும்பல், தலைவலி, மூட்டு வலி, மலட்டு தன்மை போன்றவற்றை முருங்கைக்கீரை குணப்படுத்தும் இயற்கை நிவாரணையாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *