சிதைக்கப்பட்ட மனித உடல்களை வீதியில் போட்டுவிட்டு..வானில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

மெக்சிகோவில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் சாலையில் மனித உடல்களைப் போட்டுவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுதமேந்திய மர்ம நபர்கள்
கிழக்கு மெக்சிகோவில் உள்ள Cazones de Herrera நகராட்சியில், காரில் வந்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர், சிதைக்கப்பட்ட சடலங்களை வீதியில் போட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த கும்பல் விட்டுச் சென்ற அடையாளத்தின்படி, ‘அடடா நாய்களே, நாங்கள் இங்கே இருக்கிறோம். அந்த எலிகளை குகைகளில் இருந்து வெளியேற்றிவிட்டோம்’ என பலகையில் எழுதப்பட்டிருந்தது.

அட்டர்னி ஜெனரல் அலுவலகம்
இதனைத் தொடர்ந்து, Veracruz மாநில பொது பாதுகாப்பு செயலாளர் மற்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் Code Red தொடங்கப்பட்டது மற்றும் Cartel உறுப்பினர்களைக் கண்டறிய ஒரு தேடல் பணியை செயல்படுத்தியது.

டக்ஸ்பான் நகரில் 2ஆம் திகதி, கைவிடப்பட்ட 4 உடல்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் இது தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், Veracruzana மாஃபியா கார்டெல் இச்சம்பவத்திற்கு காரணமா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *