சீன எல்லையில் முக்கியமான நகரத்தை இழந்த மியான்மர்., சரணடைந்த பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரணதண்டனை

மியான்மரின் ஜுண்டா அரசாங்கம் அதன் மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த பிரிகேடியர்கள் கடந்த மாதம் சீன எல்லையில் உள்ள ஒரு முக்கியமான மூலோபாய நகரத்தை கிளர்ச்சிக் குழுக்களிடம் இழந்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் நூற்றுக்கணக்கான வீரர்களுடன் சரணடைந்தனர்.

இந்நிலையில், மியான்மர் ராணுவ அரசு மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

லௌகாய் (Laukkai) நகரின் தளபதி உட்பட மூன்று பிரிகேடியர் ஜெனரல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக இராணுவ ஆதாரத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நூற்றுக்கணக்கான வீரர்கள் பல மாத சண்டைக்குப் பிறகு வடக்கு ஷான் மாநிலத்தில் அமைந்துள்ள லவுக்காயில் மூன்று சகோதரத்துவக் கூட்டணியிடம் சரணடைந்தனர்.

இந்த சரணடைதல் சமீப காலங்களில் ராணுவத்தின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாகும்.

இந்த சரணடைதலுக்குப் பிறகு, இராணுவ ஆட்சிக்குழு பல விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *