Nayanthara – நயன்தாரா ஒரு எட்டு கேப்டன் நினைவிடத்திற்கும் சென்று பார்த்திருக்கலாமே.. விளாசும் நெட்டிசன்கள்

சென்னை: நயன்தாரா தமிழின் டாப் நடிகைகளில் ஒருவர். கடைசியாக அவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது.

தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்துவருகிறார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அவர் செல்லாததால் அவர் மீது ரசிகர்கள் விமர்சனத்தை வைத்திருக்கின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார்.

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *