Nixon : மன்னிச்சிடுங்க.. நல்ல விஷயங்கள வளத்துக்கிறேன், கெட்ட விஷயங்கள மாத்திக்கிறேன் – நிக்சன் உருக்கமான பதிவு!

பிக்பாஸ் நிக்சன் தனது இன்ஸ்டாவில் நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர். இதை தொடர்ந்து முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து முதல் வாரத்திலேயே எழுத்தாளர் பவா செல்லதுரையும் உடல் நல பிரச்சனை காரணமாக வெளியேறுவதாக அறிவித்தார்.

அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்தபோது அதிரடியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்ன பாரதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே நுழைந்தனர். வந்த ஒரு வாரத்தில் அன்ன பாரதி வெளியேறினார்.

பின்னர் கானா பாலா வெளியேற்றப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.

வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் இந்த பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இருந்த விஜய் வர்மா அனன்யா உள்ளே நுழைந்தனர். புதிய போட்டியாளர்கள் வந்துள்ளதால் யார் எவிக்ட் ஆவார்கள் என ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்த நிலையில் அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டனர்.

அதனைதொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் ஜோவிகா விஜயகுமார், கூல் சுரேஷ், அனன்யா ராவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். பின்னர் கடந்தவாரம் விக்ரம் சென்ற பின்னர் இந்தவாரம் ரவீனாவும் நிக்சனும் அடுத்தடுத்து டபுள் எவிக்சனில் வெளியேறினர்.

இந்நிலையில் நிக்சன் தனது இன்ஸ்டாவில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில்”

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *