பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு ‘இந்த’ ஹெல்தி உணவுகளால் ஆபத்து ஏற்படாலம்..!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம்.

அந்த வகையில், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை அதீத அளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் உடல் நலனில் ஆபத்து ஏற்படுமாம். அப்படி, அவர்களுக்கு அதிகமாக கொடுக்க கூடாத உணவு பட்டியல்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

குழந்தைகளுக்கான டயட்:

குழந்தைகளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பெற்றோர்கள் பலர், அவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கவே முனைகின்றனர்.

குழந்தைகலின் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது அவர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருந்தாலும், அதை அதிகமாகச் சாப்பிடுவது எதிர்பாராத பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்தின் பிற அம்சத்தையும் போலவே, அதில் நாம் ஏற்படுத்தும் சமநிலையும் முக்கியமானதாகும்.

பழச்சாறு:

குழந்தைகள்பல சமயங்களில் பழங்களை அப்படியே உட்கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் மத்தியில், பழங்களின் உட்கொள்ளலை அதிகரிக்க பழச்சாறு கொடுப்பது சரியான வழியாக பலருக்கு தோன்றுகிறது. அவற்றில் சர்க்கரை அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும்.

பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, பல் சிதைவு மற்றும் குழந்தைகளுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து காரணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் பழங்களை முழுமையாக குழந்தைகளுக்கு கொடுக்க சொல்லி, மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களின் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமலும் கட்டுப்படுத்தலாம்.

பீனட் பட்டர்:

பாதாம் பட்டர், பீனட் பட்டர் என பலவகையான பட்டர்கள் மார்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இதில் நல்ல கொழுப்புகள், புரத சத்துகள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றனர்.

ஆனாலும், அவை கலோரி-அடர்த்தியாகவும் உள்ளன. இதை அதிகப்படியாக சாப்பிடுவதால் குழந்தைகள் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமன்றி, ஒரு சில பட்டர்களில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் எண்ணெய்கள் சேர்க்கப்படலாம்.

இதுவும் உடல் நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, சர்க்கரையற்ற பட்டர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் என குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *