மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி ? நாளை மறுநாள் வெளியாகிறது அறிவிப்பு..!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் (பிப். 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. அவற்றுள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இன்று (பிப். 26) தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.விரைவில் திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் மக்கள் நீதி மய்யத்திற்கான இடம் குறித்தும் காங்கிரஸிடம் பேசப்படும் எனத் தெரிகிறது. அதில் மக்கள் நீதி மய்யத்திற்கான இடம் ஒதுக்கப்படாவிட்டால் பிப்ரவரி 28 ம் தேதிக்குள் அதன் நிர்வாகிகளை அழைத்து திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *