பொங்கல் பானையில் கட்டும், பசுமஞ்சளை இப்படியும் பயன்படுத்தலாமா.? ஆச்சரிய தகவல்.!

தைத்திருநாளன்று நாம் பொங்கல் வைக்கும் பானையில், பார்ப்பதற்கு இஞ்சியை ஒத்திருக்கும் பசுமஞ்சளை கட்டுவதுண்டு.

அந்த பசுமஞ்சள் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியது என்பதை அறிந்திருக்கிறோமா?

hsCRP (High-sensitivity C-reactive protein) என்னும் டெஸ்ட் உடலில் உள்ள முக்கிய ரத்தக்குழாய்களில் உள்ள உள்காயங்களை அறிவதற்காக பயன்படுகிறது. மாவுச்சத்து அதிகம் நிறைந்த உணவு பழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது அதிகமாக இருக்கக்கூடும்.

இப்படி இரத்த குழாயில் ஏற்பட்டுள்ள சேதங்கள் நாளடைவில் கொழுப்பை அந்த இடத்தில் சேர்க்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் எளிதில் உருவாகின்றன. உடல் பருமன், தொப்பை, நீரிழிவு, கொழுப்புக் கல்லீரல் நோய், PCOD போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதனால் hsCRP அதிகரிக்கிறது. இதற்கு ஒரே நிவாரணி பசுமஞ்சளே ஆகும்.

ஒரு விரல் அங்குல அளவு தோல் நீக்கிய பசுமஞ்சள், தேக்கரண்டி மிளகு, 2 பல் வெள்ளைப் பூண்டு, 4 முதல் 5 சிறிய வெங்காயம், துளசி இலைகள் சிறிதளவு (கர்ப்பம் தரிக்க முயலுவோர் துளசியை சேர்க்க வேண்டாம்) இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ விழுதுதாக்கிக் கொள்ளுங்கள். அரைத்த விழுதில் தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்து வந்தால் குடலில் உள்ள அழற்சி குறையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *