11 நாள் விரதத்தை கடைபிடித்து வருகிறார் பிரதமர் மோடி..!

ஜனவரி 22ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் மோடி 11 நாள் விரதத்தை கடைபிடித்து வருகிறார். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி விரத நாட்களில் கட்டிலில் தூங்காமல் வெறும் தரையில் மட்டுமே படுத்து தூங்கி வருகிறாராம். அது மட்டும் இன்றி இளநீர் மட்டுமே பருகிவருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விரத நாட்களில் சில மந்திரங்களையும் உச்சரிக்கிறாராம். அலுவல் பணிகளுக்கு இடையே தீவிர விரதத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து வருகிறார். மேலும், கோவிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமாக உள்ள ஜடாயு சிலையை பிரதமர் மோடி வணங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *