புடின் இறந்திருக்கலாம்..! எழுந்துள்ள புதிய சர்ச்சை

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவரும் சர்வாதிகாரியுமான ஸ்டாலினுடைய பேரன், ரஷ்ய ஜனாதிபதி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.

ரஷ்ய அரசியலில் ஈடுபாடு கொண்டவரான ஜேக்கப், புடின் இறந்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த, தேர்வு செய்யப்படாத சிலர், நடிகர்கள் சிலரை புடின் போல நடிக்கவைத்துவிட்டு, அவர்களை பின்னாலிருந்து கட்டுப்படுத்திவருவதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் இராணுவ உளவுத்துறையும், புடினுக்கு பதிலாக போலிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக கூறிவருகிறது.

அத்துடன், ரஷ்யாவிலேயே சிலர் புடின் இறந்துவிட்டதாகவும்,அவருக்கு பதிலாக போலிகளை நடிக்கவைத்து சிலர் அரசைக் கட்டுப்படுத்திவருவதாகவும் கருதுகிறார்கள்.

பாதுகாப்பு குறித்த அச்சம்
வேறு சிலரோ, புடின் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாலோ அல்லது தனது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பதுங்குகுழியில் பதுங்கியிருப்பதாலோ அவருக்கு பதிலாக போலிகள் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் துவக்கத்தில், தனது பாடசாலை தோழர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்று கூறி புடின் சந்தேகத்தை அதிகமாக்கினார்.

இந்நிலையில், புடின் இறந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் ஸ்டாலினுடைய பேரனான ஜேக்கப், இப்போதிருக்கும் புடின், தான் ஒரு செல்வாக்கான அதிகாரம் மிக்க நபர் என்பது போல நடந்துகொள்வதில்லை என்றும் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *