ரஜத் பட்டிதார் சர்பராஸ் கான்?.. யாருக்கு வாய்ப்பு தர வேண்டும்? – ஆகாஷ் சோப்ரா புதிய கோணத்தில் பதில்

மேலும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பேட்டிங்கில் தொழில்நுட்ப ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். இந்திய அணிக்கு இது ஒரு தனி பிரச்சனையாக இருக்கிறது. மேலும் முக்கியம் மூன்று வீரர்கள் இல்லாதது என சேர்த்து, இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் மிக பலவீனமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் தற்போது பேட்டிங் யூனிட்டில் புதிதாக ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு யாருக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்கும்? என்கின்ற விவாதங்கள் வெளியே சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “கேஎல்.ராகுல் கேரியரில் காயம் மற்றும் நோய் பெரிய விஷயமாக இருந்து வந்திருக்கிறது. அவர் முதல் இன்னிங்சில் நன்றாக பேட்டிங் செய்ததோடு இரண்டாவது இன்னிங்ஸில் உறுதியாக பேட்டிங் செய்தார்.

இந்திய அணியில் ஸ்வீப் ஆடக்கூடியவர்கள் மிகவும் குறைவு. ரோஹித் சர்மா மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் இதை விளையாடுவார்கள். தற்பொழுது ஒருவர் அணியில் இல்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *