12 வயதில் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமாகும் வைபவ் சூர்யவன்ஷி. சச்சின், யுவ்ராஜ் சாதனை முறியடிப்பு!

பீகாருக்கான அணியில் ரஞ்சிக் கோப்பைக்காக விளையாடவுள்ளார்.

இதன் மூலம் குறைந்த வயதில் ரஞ்சி கோப்பைக்கு அறிமுகமாகும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் (15 வயது 230 நாட்கள்) மற்றும் யுவ்ராஜ் சிங் (15 வயது 57 நாட்கள்) ஆகிய இருவரும் இந்த சாதனையை படைத்திருந்தனர். இருவருமே இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகள் படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனைப் பற்றி பேசியுள்ள வைபவ் “எனக்கு இந்த சாதனைப் பற்றி தெரியவில்லை. நான் பேட் செய்து திரும்பியபோது என்னுடைய அணித் தோழர்கள் எனக்கு இந்த தகவலை சொன்னார்கள். நான் சச்சின் மற்றும் யுவ்ராஜ் சிங் போன்ற சாதனையாளர்களின் சாதனையை முறியடித்து விட்டதாக கூறினார்கள். எனக்கு அது பெருமையாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *