பாலிட்டில் பிஸியாகும் ராஷ்மிகா மந்தனா.. வெளியான அசத்தல் தகவல்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருடைய திரைப்பயணம் கன்னடத்தில் தொடங்கினாலும், தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவில் நடிகை ராஸ்மிகா மந்தனாவை நேஷனல் கிரஷ் என்று அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு திரைப்படங்களில் இருக்கும் ரசிகர்கள் போலவே சமூக வலைதளங்களிலும் இவரை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா பாலிவுட் சினிமாவில் தனது கால் தடம் பதித்து வெற்றிகரமாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், 900 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி விக்கி கௌஷாலுடன் அவர் இணைந்து நடித்த ஜாவா படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்த திரைப்படம் ராஸ்மிகாவின் 4வது பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *