பும்ராவிற்கு ஓய்வு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் – இங்கிலாந்து பேட்டிங்!

இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் மார்க் வுட் மற்றும் ரெஹான் அகமது இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஆலி ராபின்சன் மற்றும் சோயிப் பஷீர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

இங்கிலாந்து:

ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் (கேபன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் ஹார்ட்லி, ஆலி ராபின்சன், சோயிப் பசீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *