ரௌடி மண்டைவெட்டு மாதவனை மண்டையே இல்லாமல் வெட்டி வீசிய கும்பல்; திருச்சியில் பரபரப்பு

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தலை வெட்டப்பட்ட நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வெட்டி கொள்ளப்பட்ட நபர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பிரபல ரௌடி மாதவன்(வயது 50) என்பதும், இவரை மண்டை வெட்டு மாதவன் என ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்மீது பல்வேறு வழக்குகள் நிழுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *