ஒரு போட்டா போட்டு டிரெண்டிங்கில் வந்த சமந்தா!. புது வருசத்துக்கு செம ட்ரீட்டுதான்!..

Samantha: சென்னையை சேர்ந்த சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என உச்சம் தொட்டது என்பது சாதாரண வளர்ச்சி இல்லை. அதுவும் ஆணாதிக்கம் நிறைந்துள்ள திரைப்பட உலகில் ஒரு பெண் பெரிய கதாநாயகி ஆக வேண்டுமெனில் அழகு, நடிப்பு திறமை மட்டுமல்ல. தாக்குப்பிடிக்கும் திறமை இருக்க வேண்டும்.

தோல்வியின் போது துவளாமல் இருக்க வேண்டும். இது எல்லாமே சமந்தாவிடம் இருந்தது. அறிமுகமானது தமிழ் படம் என்றாலும் அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று திறமை காட்ட துவங்கினார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சூர்யா, தனுஷ், விஷால் என பலருடனும் நடித்தார். தெலுங்கில் நடித்தபோது நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் வழக்கம்போல் சினிமாவில் நடிப்பதில் மட்டும் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். ஒருபக்கம், தோல் வியாதியாலும் அவர் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறது. அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்லும் சமந்தா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சிலசமயம் மோசமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையே கூச்சப்பட வைக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டில் புதுவருடத்தை கொண்டாடிய சமந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். இந்த ஒரு போட்டோவை போட்டு டிவிட்டரில் டிரெண்டிங்கில் வந்துவிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *