ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16 ஆ;ம ரத சப்தமி விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருமலை மின் விளக்குகளால் ஜொளிக்கிறது. மேலும் மாட வீதிகள் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

ரதசப்தமி நாளில் காலை துவங்கி இரவு வரை திருப்பதியில் ஏழுமலையான் ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காட்சியளிப்பார். இந்த ஒரு நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறும். ஆகையால் இந்த நாளை மினி பிரம்மோற்சவம் என்றும் பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரத சப்தமி நாளில் எப்போது எந்தெந்த வாகன சேவை நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகன சேவை நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 3 வரை சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வ பூபால வாகனத்திலும் மலையப்ப சாமி காட்சியளிக்க உள்ளார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகன சேவை நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 3 வரை சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வ பூபால வாகனத்திலும் மலையப்ப சாமி காட்சியளிக்க உள்ளார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.

ரத சப்தமியை முன்னிட்டுகோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனை ஆகியவை தனியாக செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *