ஷீரடி சாய்பாபா கோவில் போறீங்களா… இதைப் பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

ஷீரடியில் சாய்பாபா கோயில் போறீங்களா…? மறக்காம இதைப் பார்த்துட்டு வாங்க. பாபாவின் அருள் முழுமையாக கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பாபாவுக்கு நிகர் அவரே தான்.

வியாழக்கிழமை பாபா அப்பாவுக்கு உகந்த தினம் என்பது நமக்கு எல்லாம் நல்லா தெரியும். வியாழனன்று இந்த செய்தி உங்க கண்ணில் படுகிறது எனில், அதுவே பாபாவின் அற்புதம் தான். நீங்கள் நெடுநாட்களாகவே வேண்டிய, விரும்பியதொன்று உங்கள் கைகளில் வசப்படப் போகிறது.

சாய்ராம்… ஒவ்வொரு முறையும் மனசுக்கு சஞ்சலங்கள் வரும் போது ஷீரடி போய் பாபாவிடம் பேசி, அவரை தரிசித்து தெளிவு பெறுகிறோம். ஆனால், ஒரு முறை கூட ஷிரடியில் இருக்கும் இடங்களை நாம் முழுதாக தெரிந்து கொள்ளவில்லை. இனி அடுத்த முறை ஷீரடிக்கு பாபாவை தரிசனம் செய்யும் போது, மறக்காம இந்த இடத்தையும் தரிசித்து, முழுதாக பாபாவின் ஆசியைப் பெறுங்கள்.!

சாய்பாபா குருநாதர் ” வெங்குஸதாஸிடம் “சுமார் 12 ஆண்டுகள் பாதாள அறையில் பயிற்சிகள் பெற்றார் . அந்த பயிற்சிகள் எங்கு நடந்தன என்பது சற்று ஆச்சரியமான, அதிர்ச்சி தரத்தக்க விதத்தில் இருந்தது. ஷிரடியில் கிராமத்து கோயில் ஒன்று உண்டு . அங்கு வீற்றிருந்து அருள் பாலிப்பவர் கண்டோபா கடவுள். மிகவும் சக்தி வாய்ந்தவராக்க கருதப்படுபவர்.

அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென்று கண்டோபா சுவாமியின் சக்தி உள்புகுந்தது சாமியாடத் தொடங்கினார். அம்மக்கள் உடனே உணா்ச்சி வசப்பட்டு, அவருக்கு வேண்டிய சகல மரியாதைகளையும் செய்தனா்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *