புளிப்பும் காரமுமாக க்ளாஸிக் புளியோதரை செய்வது எப்படி?

அதற்கான செய்முறையை இங்கே தருகிறார், பெங்களூருவைச் சேர்ந்த உமா ராமநாதன். சமையல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டிருக்கும் இவரது இந்த ரெசிப்பி, ஒரு பெர்ஃபெக்ட் புளியோதரையை நீங்கள் ருசிபார்க்க உதவும்.

தேவையான பொருள்கள்:

புளி – 2 எலுமிச்சை அளவு (தண்ணீரில் ஊறவைத்து, நன்கு கரைத்து, தேவையான அளவுக்கு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்)

கிள்ளி வைத்த நீட்டு மிளகாய் வற்றல் – 6 (தாளிக்க)

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு

மஞ்சள்தூள் மற்றும் உப்பு – தேவையான அளவு

புளியோதரை பவுடர் தயாரிக்க

மிளகாய் வற்றல் – 7 (எண்ணிக்கையில்)

வெந்தயம் – 4 டீஸ்பூன்

தனியா (கொத்தமல்லி விதைகள்) – 6 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன் (வறுக்க)

செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி, புளியோதரை பவுடர் தயாரிக்கத் தேவையான பொருள்களான மிளகாய் வற்றல், வெந்தயம், தனியா, கடலைப்பருப்பு, மிளகு ஆகிய அனைத்தையும் அதில் மொத்தமாகச் சேர்த்து, பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை பொடியாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியானது அதிகக் கொரகொரப்பாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நைஸாகவும் இருக்கக்கூடாது. நடுத்தர அளவில் பொடித்து எடுக்க வேண்டும்.

வாணலியில் தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் விட்டுச் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் புளிக்கரைசலை அதில் சேர்க்கவும். பின்னர் இதில் மஞ்சள்தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் இதனுடன் சேர்த்துக் கலவையை நன்கு கொதிக்கவிடவும்.

நல்லெண்ணெய் – தேவையான அளவு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *