குவைத்தில் இலங்கை பெண் அவதி! கணவர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

இலங்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர குவைத்தில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குவைத்தில் இலங்கை பெண் அவதி
இலங்கையின் மனம்பிட்டிய, மஹாவெவ பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர என்பவர் குவைத்தில் வீட்டு வேலைக்காக மூன்று மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

குடும்ப பொருளாதார நெருக்கடி, சொந்தமாக வீடு கட்டும் கனவு மற்றும் 3 குழந்தைகளின் கல்வி கனவு ஆகியவற்றிற்காக செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர அங்கு வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் குவைத்தில் தனது மனைவி செவ்வந்தி மஹேஷிகா ஜயவீர தனிமையில் விடப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவித்து, அவரை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை என மனம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கணவரின் கோரிக்கை
சம்பந்தப்பட்ட பெண்ணின் குழந்தைகளை அவரது தாயார் பார்த்துக் கொண்டுள்ளதுடன், கணவன் இரும்பு வாளி உற்பத்தியை பகுதி நேர வேலையாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பெண் பணிபுரியும் வீட்டில் பலவிதமான சித்ரவதைகளை எதிர்நோக்கி வருவதனால், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *