ராம்கோபால் வர்மாவை அழ வைத்த ஸ்ரீதேவி

மிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இப்போதும் இருக்கிறது.
திரையுலகத்திலும் ஸ்ரீதேவியை மறக்க முடியாத பலர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது ஸ்ரீதேவியைப் பற்றி ஏதாவது ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். ‘ஏஐ’ மூலம் உருவாக்கப்பட்ட ஸ்ரீதேவி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இந்த புத்திசாலித்தனமான ‘ஏஐ’ ஸ்ரீதேவி என்னை அழ வைத்துவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.புகைப்படம் ஒரு பக்கம் ஸ்ரீதேவி போல தெரிந்தாலும் மறுபக்கம் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி போல இருப்பதாக ரசிகர்கள் சிலர் அதில் கமெண்ட் செய்திருந்தனர். புகைப்படத்தைப் பார்த்து இது ஸ்ரீதேவி தானா என்பதை நீங்களே சொல்லுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *