Sruthi Shanmuga Priya: ‘ஏன் இவ்ளோ சீக்கிரம்.. அவனுடன் வாழ்ந்த நாட்கள் பத்தல’ -மறைந்த கணவரை நினைத்து வாடும் சண்முக பிரியா

Sruthi Shanmuga Priya Interview: நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா, வாணி ராணி, கல்யாண பரிசு மற்றும் பொன்னூஞ்சல் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஸ்ருதி ஸ்ருதி சண்முக பிரியா.

நாதஸ்வரம் நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். நடிகையாக இவர் சில படங்களிலும் நடித்து உள்ளார்.

இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் மாடலான அரவிந்திற்கும் கடந்த 2022 ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடி சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருந்தது, மேலும் அவர்கள் ஒன்றாக செய்த ரீல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திருமணமாகி 1 வருடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அரவிந்த் உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சண்முக பிரியா உடைந்து போனார். தற்போது மெல்ல மெல்ல தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.

இதனிடையே தன் கணவர் இல்லாத நிலையில் அதனை எப்படி சமாளிக்கிறேன் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக SS Music யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “என் கணவரின் இறப்பிற்குப் பிறகு நான் ஒரு நேர்காணல் கொடுக்கிறேன். இன்னும் என் கணவர் அரவிந்த் உயிருடன் இல்லை என நான் நினைக்கவே இல்லை. அவர் உடம்பு மட்டும் தான் என்னுடன் இல்லை. ஆனால் அவரின் ஆன்மா என்னை சுற்றி மட்டுமே இருக்கிறது.

என்னால் அதை உணர முடிந்தது. என்னை சுற்றியவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என நன்கு தெரியும். அதனால் என்னுடைய மனநிலைமை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அதை வெளிக்காட்ட விரும்பவில்லை.

முன்பு இருந்ததை விட அரவிந்த் மேல் இருக்கும் காதல் இப்போது அதிகமாகவே உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். நான் எங்கு சென்றாலும் அரவிந்த் புகைப்படம் எடுத்து செல்வேன். அவன் என்னுடன் வருவது போன்றே இருக்கும். அவனுடன் நான் வாழ்ந்த நாட்கள் பத்தவே இல்லை. ஒரு வருடத்திற்குள் நாங்கள் நிறைய செய்து இருக்கிறோம். அது எல்லாம் நினைவாக இருக்கிறது.

அரவிந்தின் மரணத்தின் கடைசி நிகழ்வுகளை நிறைய பேர் ஆராய்ச்சி செய்தார்கள். அது ரொம்ப கடினமாக இருந்தது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என தெரிந்து என்ன நடக்க போகிறது. என்னுடைய மனநிலைமை மோசமாக இருந்தது. இருந்தாலும் அவன் இறந்து இரண்டாவது நாளே இது போன்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம் என வீடியோ பதிவிட்டேன்.

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது அரவிந்த் இறந்து விட்டதாக வதந்தி பரப்பினார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *