ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் இருவருக்கு மரண தண்டனை வழங்கிய தலிபான்

ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு தலிபான்கள் பொது இடத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்திருக்கும் மைதானத்தில் நேற்று(22.02.2024) ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தண்டனை விதிப்பு
இந்நிலையில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எதையும் தலிபான்கள் வெளியிடவில்லை.

மேலும், தலிபான்களின் தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சாடா பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *