தமிழக அரசு முக்கிய அறிவிப்பு : ஆசிரியர் நேரடி நியமனத்தில் வயது உச்ச வரம்பு உயர்வு..!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு விதிகள் முறையே விதி எண்.6(a), விதி எண்.5 மற்றும் விதி எண்.6இல் தெரிவிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தியுள்ளது. அதன்படி பொது பிரிவினருக்கு 53 வயதாகவும், இதர பிரிவினருக்கு 58 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *