குழந்தை பிறந்ததும் கோமாவுக்குச் சென்ற இளம்பெண்: 19 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை

ஜேர்மனியில் வாழும் பெண்ணொருவரைத் தேடி இரண்டு இளம்பெண்கள் வந்தார்கள். அவர்கள் மூவரும் சந்தித்துக்கொண்டபிறகுதான், தங்களைக் குறித்த அதிரவைக்கும் பின்னணியை அவர்கள் அனைவரும் தெரிந்துகொண்டார்கள்.

சமூக ஊடகமொன்றில் தன்னைப்போலவே ஒருவர் இருப்பதைக் கண்ட இளம்பெண்

ஜார்ஜியா நாட்டில் வாழ்ந்துவரும் Ano Sartania (21) எனும் இளம்பெண்ணின் தோழிகள், அவரிடம், தலைமுடியின் நிறத்தை மாற்றிக்கொண்டு சமூக ஊடகத்தில் நடன வீடியோக்கள் போடுவது நீதானே என்று கேட்டிருக்கிறார்கள்.

நமக்கும் நடனத்துக்கும் காத தூரமாயிற்றே என Ano கூற, அவருக்கு சில வீடியோக்களை ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்கள் தோழிகள். பார்த்தால், வீடியோவிலிருக்கும் பெண் அப்படியே Anoவைப் போல் இருக்கிறார்.

குழந்தை பிறந்ததும் கோமாவுக்குச் சென்ற இளம்பெண்: 19 ஆண்டுகளுக்குப் பின் தெரியவந்த உண்மை | Young Woman In Coma After Giving Birth

யார் அந்த பெண் என்று விசாரித்து ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்துவிட்டார் Ano. விசாரித்ததில் அவர் பெயர் Amy Khvitia (21) என்பதும், அவர் தனது சகோதரி என்பதும், தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

அதிரவைத்த பின்னணி

உண்மை என்னவென்றால், ஜார்ஜியா நாட்டில், குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரித்து சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாம்.

பிரசவத்துக்குச் செல்லும் தாய்மார்களிடம், பிள்ளை இறந்தே பிறந்தது என்று பொய் சொல்லிவிட்டு, செவிலியர்கள் சிலர் கூட பிள்ளைகளை கருப்புச் சந்தையில் விற்றுவிடும் அநியாயமும் நடக்கிறதாம்.

அவ்வகையில், Aza Shoni என்னும் பெண் பிரசவத்துக்குச் செல்ல, பிரசவித்ததும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட, கோமாவுக்கே சென்றுள்ளார் அவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *