மகன் இறந்த துக்கத்தில் சிறிது நேரத்திலேயே தந்தையும் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்

தமிழத்தின் ஈரோடு மாவட்டத்தில் மகன் உயிரிழந்த நிலையில் தந்தையும் மரணித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

உடல்நலக்குறைவால் அவதி
ஈரோடு மாவட்டம் தாளவாடி கனகராசர் வீதியைச் சேர்ந்தவர் மாதேவன் (55). இவர் கர்நாடகாவில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவரது மூத்த மகன் கணேசன் (34) தாளவாடியில் மரச்சாமான் கடை நடத்தி வந்தார். ஆனால், சில ஆண்டுகளாகவே கணேசன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே புறப்பட்ட கணேசன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது.

துக்கத்தில் தந்தையும் மரணம்
இதனைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது தந்தை மாதேவன், இறுதிச்சடங்கின்போது மீளா துக்கத்தில் காணப்பட்டுள்ளார். உறவினர்கள் கணேசன் உடலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த சமயம், மாதேவனும் மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக தாளவாடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகரில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் தந்தை – மகன் இருவரின் உடல்களும் அருகருகே வைத்து தகனம் செய்யப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *