குடும்ப சண்டையில் மனைவியைக் கொன்றுவிட்டு தலையுடன் பேருந்து நிலையத்திற்கு வந்த கணவன்..!

மேற்கு வங்க மேதினிபூர் மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய நபர் ஒருவர், ஒரு கையில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை, மற்றொரு கையில் கத்தியுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கத்தி கூச்சலிட்டபடி சுற்றித் திரிந்துள்ளார். இதைப் பார்த்த பயணிகள் பீதியடைந்தனர். இந்த பயங்கர காட்சியை சிலர் தங்களின் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் பெயர் கௌதம் குச்சாயத் (40) என்பதும், குடும்ப பிரச்சினையில் மனைவியை கொலை செய்து, தலையை வெட்டி பேருந்து நிலையத்திற்கு எடுத்து வந்ததும் தெரியவந்தது.

நடைபாதை வியாபாரியான குச்சாய்த், தனது மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவைக் கொண்டிருப்பதாக சந்தேகித்ததால், சில காலமாக அவளுடன் ஒரு பிரச்சனையான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார், அவர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்.

கௌதம் குச்சாயத் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் இதற்கு முன்பு கூறியுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கத்தாவில் உள்ள அலிபூர் உயிரியல் பூங்காவிற்கு குச்சாயத் சென்றபோது, சிங்கம் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏறி குதித்து படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *