மகன், மகளை ஏரியில் வீசி தாயும் தற்கொலை… பரபரப்பு.. !

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் யார் என்பது குறித்து அக்கம்பக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் அவர்கள் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஏரியில் உயிரிழந்த சடலமாக மிதந்தவர்கள் சிந்தாமணி தாலுகா யாகவகோட்டையை சேர்ந்த மல்லிகார்ஜுன் மனைவி ராதா. இவருடன் அவர்களின் 4 வயது மகள் பூர்விதா மற்றும் 1½ வயது மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.

ராதா எதற்காக தனது மகன்மற்றும் மகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் கணவர் மல்லிகார்ஜுனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *