மதுவுக்கு பணம் கேட்டு தொல்லைகொடுத்த நபர்..பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..கதறும் குடும்பம்

தமிழக மாவட்டம் அரியலூரில் மகனின் மதுப்பழக்கத்தால் பெற்றோர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

கணவரின் தொல்லை
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளமதி. திருமண இவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். கணவரின் தொல்லையால் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இளமதி தனது பெற்றோர் ராமசாமி (70), வளர்மதியிடம் (60) மது அருந்த பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

பூச்சி மருந்தை குடித்த பெற்றோர்
நேற்று முன்தினம் இறந்து இளமதி தன் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். மகனின் மதுப்பழக்கத்தினால் இன்னலுக்கு ஆளாகி அவரது பெற்றோர் விபரீத முடிவெடுத்துள்ளார்.

இருவரும் பூச்சி மருந்தை குடித்ததில் வளர்மதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *