அடங்காத ஹவுதிகள்… அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஏமன் அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Eagle Bulk சரக்கு கப்பல்

குறித்த தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் அல்லது ஆள் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய கப்பலின் நிர்வாகிகள் தரப்பு தெரிவிக்கையில், ஏதன் வளைகுடாவில் இருந்து 100 மைல் தொலைவில் பயணம் செய்யும் போது, ​​அதன் சரக்கு பகுதியில் ஏவுகணை தாக்கியதாகவும் ஆனால் குறிப்பிடும் அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் ஊழியர்கள் எவரும் காயமடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பகுதியில் இருந்து உடனடியாக விலகியதாகவும் Eagle Bulk சரக்கு கப்பல் சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏமனின் செங்கடல் கடற்கரையின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹவுதிகள் இஸ்ரேலுடன் தொடர்புடையவை அல்லது இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தங்களால் நேரிடையாக களமிறங்க முடியவில்லை என்பதால், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்குவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

கட்டுப்படுத்தாது என சூளுரை

ஆனால் ஹவுதிகளின் இந்த முடிவு பொருளாதார ரீதியாக கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடந்த வாரம் திடீரென்று ஏமனில் ஹவுதிகளின் தளங்கள் மீது இரவோடு இரவாக அதிரடி தாக்குதலை முன்னெடுத்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *