மும்பை போனதுக்கு காரணம் இதுதான் – உண்மையை போட்டு உடைத்த ஜோதிகா!

தமிழ் சினிமாவில் 90 களில் நடிக்க தொடங்கிய இவருக்கு இன்றளவிலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவே இல்லை. அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஜோதிகா தான். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டவர்.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். தனித்துவமான துரு துரு நடிப்பிற்கும், முக பாவனைகளுக்கும் பெயர் போனவர் நடிகை ஜோதிகா.

நிறைய படங்களில் நடிகர் சூர்யாவுடன் ஜோடி போட்ட ஜோதிகா, பல வருடங்களாக காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் சினிமாவுக்கு முழுக்கு போட்ட ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்ததை ரசிகர்கள் கொண்டாடினர்.

திருமணத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் வீட்டில் மாமனார் மாமியருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த ஜோதிகா, சமீபத்தில் சூர்யாவுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆனார். சென்னையில் இருந்தாலும் அடிக்கடி மும்பையும் சென்று வருகிறார்

இத்தனை வருடம் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென்று மும்பைக்கு சென்றுவிட்டனர், மேலும் குழந்தைகளும் அங்கேயே படிப்பை தொடர்வதாக தகவல் வெளியானது

கொரோனா காலக்கட்டத்தில் அம்மா – அப்பாவுக்கு 2, 3 முறை கோவிட் வந்தது. அப்போது விமான சேவை இல்லாததால் என்னால் அங்கு செல்ல கூட முடியவில்லை. அந்த சமயத்தில் யோசித்தேன்.

25 வயதிலிருந்து நான் சென்னையில்தான் இருக்கிறேன். என் பெற்றோருடன் நான் இருந்த காலங்கள் மிகவும் குறைவு. திருமணத்துக்குப் பின் பெண்கள் தங்கள் பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிவதில்லை.

திருமணத்துக்குப்பின் பொறுப்புகள் கூடிவிடுவதால் அதனை விட்டு பெற்றோர்களுடன் நேரம் செலவழிப்பது குறைந்துவிடுகிறது. அவர்களுடன் எனது நாட்களை சிறுது காலம் செலவிட வேண்டும் என்று தோன்றியது, குழந்தைகளுக்கும் அங்கு ஸ்கூல்ஸ் கிடைத்தது அதனால் தான் சென்றோம்.

வேற எந்த விதமான காரணமும் இல்லை, இது தற்காலிக மாற்றம் தான் நிரந்தரமாக நாங்கள் மும்பை செல்லவில்லை என்று விளக்கம் தந்தார் ஜோதிகா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *