வசூலை வாரி குவித்த திருப்பதி ஏழுமலையான்! 22 வது முறையாக சாதனை!

2023-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்

கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்து உள்ளது. இதன் மூலம் இக்கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2023-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *