திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிக்கணுமா.? ஆன்லைனில் டிக்கெட் பெற தேதி அறிவிப்பு..!!

ரும் மே மாதத்திற்கான அனைத்து வகையான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களின் வெளியீட்டு தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் வெளிட்டுள்ளனர்.

மே மாதத்திற்கான ஸ்ரீவாரி சிறப்பு 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் கோட்டா வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

தங்கும் அறைகளுக்கான கோட்டா டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் ஏராமான தங்கும் விடுதிகள் உள்ளன. திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணுவாசம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்களுக்கான அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் பத்மாவதி விருந்தினர் மாளிகை, வெங்கடேஸ்வரா விருந்தினர் மாளிகை, ராம் பகீச்சா வராஹஸ்வாமி ஓய்வு இல்லம், டிராவலர்ஸ் பங்களா, நாராயணகிரி விருந்தினர் மாளிகை, நந்தகம், பாஞ்சஜன்யம், கௌஸ்துபம், வகுல்மாதா, சப்தகிரி குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவையும் திருமலையில் உள்ளன.

பக்தர்கள் தாங்கள் தங்குவதற்கு இந்த அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் மின்னணு லக்கி டிப் பதிவு வரும் 18 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதில் கல்யாணோத்ஸவ, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவ சேவை, சஹஸ்ர தீபாலங்கார சேவை, சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கு பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *