ராகுல் காந்தியின் யாத்திரையை தடுக்க பார்க்கும் பாஜக அரசு : திட்டமிட்டபடி யாத்திரை தொடங்கும் – காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார்.

இந்த நடைப்பயணத்தைக் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்த யாத்திரை காங்கிரசுக்கு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியான இமாச்சல பிரதேசம், கர்நாடகா போன்ற இடங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்த முக்கிய காரணமாகவும் இருந்தது. அதோடு காங்கிரசுடன் சேராமல் இருந்த பிராந்திய காட்சிகளைக் காங்கிரஸோடு கூட்டணி வைக்கச் செய்யும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *