நாளை தைப்பூசம்… திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்… !

மிழகம் முழுவதும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை ஜனவரி 25ம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். காலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது.

காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். அங்கும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சிஅளிக்கிறார்.

தைப்பூச தினத்தில் முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த தினமான இன்று ஜனவரி 24ம் தேதி புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற உள்ளது. இன்று மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *